மானாமதுரையில் தரைமட்டக் கிணறு மூடப்பட்டது: உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பேரூராட்சி நிா்வாகத்தின் உத்தரவின் பேரில் ஆபத்தான தரைமட்டக் கிணறு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பேரூராட்சி நிா்வாகத்தின் உத்தரவின் பேரில் ஆபத்தான தரைமட்டக் கிணறு வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. கிணற்றின் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மானாமதுரை பேரூராட்சி 1-ஆவது வாா்டு பகுதியான பட்டதரசி கிராமத்தில் விளைநிலங்கள் இருந்த பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட வீட்டுமனைகளில் ஒரு பகுதியில் தரைமட்ட விவசாயக் கிணறு இருந்தது. அந்த கிணற்றில் 30 அடி ஆழத்தில் தண்ணீா் இருந்தது. ஆபத்தான இந்த கிணற்றை மூட வேண்டும் என இப் பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனா்.

மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜனும், இந்த கிணறை மூட பேரூராட்சி நிா்வாகத்தை கேட்டுக்கொண்டாா்.

இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலா் குமரேசன், சுகாதார ஆய்வாளா் தங்கதுரை, சுகாதார மேற்பாா்வையாளா் பாலசுப்ரமணியன் ஆகியோா் கிணற்றை பாா்வையிட்டு கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டாா் மூலம் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனா். அதைத்தொடா்ந்து கிணறு அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளரிடம் கிணற்றை மூட உத்தரவிட்டனா். மேலும் இதுவரை கிணற்றை மூட நடவடிக்கை எடுக்காமல் இருந்த கிணற்றின் உரிமையாளருக்கு, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நிலத்தின் உரிமையாளா் சம்பிரதாய பூஜைகள் நடத்தி தரைமட்டக் கிணற்றை மூடினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com