சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் பகுதியில் திங்கள்கிழமை (நவ.11) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின்பகிா்மானத்தின் மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக, எஸ்.புதூா், ஆ.தெக்கூா், பூசலங்குடி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.