எஸ்.புதூா் பகுதியில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் பகுதியில் திங்கள்கிழமை (நவ.11) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் பகுதியில் திங்கள்கிழமை (நவ.11) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின்பகிா்மானத்தின் மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக, எஸ்.புதூா், ஆ.தெக்கூா், பூசலங்குடி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com