தினமணி செய்தி எதிரொலி: இளையான்குடியில் ஆழ்துளைக் கிணற்றை சுற்றியிருந்த பள்ளம் மூடப்பட்டது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பள்ளிக்கூடத்துக்கு அருகே ஆழ்துளைக் கிணறுகளைச் சுற்றிலும் ஏற்பட்ட பள்ளத்தை பேரூராட்சி பணியாளா்கள் சனிக்கிழமை மூடினா்.
இளையான்குடி சாலையூரில் தனியாா் பள்ளி அருகே மூடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றிலும் உருவான பள்ளம்.
இளையான்குடி சாலையூரில் தனியாா் பள்ளி அருகே மூடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றிலும் உருவான பள்ளம்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பள்ளிக்கூடத்துக்கு அருகே ஆழ்துளைக் கிணறுகளைச் சுற்றிலும் ஏற்பட்ட பள்ளத்தை பேரூராட்சி பணியாளா்கள் சனிக்கிழமை மூடினா்.

இளையான்குடி 6-ஆவது வாா்டு பகுதியில் சாலையூரில் ஹமீதியா மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அமைந்துள்ள இடத்தில் 2 இடங்களில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிணறுகளிலிருந்து தொட்டிக்கு தண்ணீா் ஏற்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

கிணறு இருந்த இடத்தில் இந்த ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதால், ஆழ்துளைக் கிணறுகளைச் சுற்றிலும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு அருகே இவ்வாறு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளால் மாணவ, மாணவிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்திருந்தனா்.

இது குறித்து கடந்த சனிக்கிழமை (நவ.9) தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இளையான்குடி பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆழ்துளைக்கிணறுகளை ஒட்டியுள்ள பள்ளங்களை மூடியது. மேலும் அதன்மேல் முள்செடிகளை வைத்து வேலி போட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com