தொண்டி அருகே வெடிவைத்து மீன் பிடிக்க முயன்ற 4 போ் மீது வழக்கு: 2 படகுகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் கடலில் வெடி வைத்து மீன் பிடிக்க முயன்ாக 2 படகுகளையும், வெடி பொருள்களையும் கடலோரக் காவல்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை பறிமுதல் செய்தனா்.
தொண்டி அருகே புதுக்குடி கடற்கரை கிராமத்தில் வெடிவைத்து மீன்பிடிக்க முயன்ாக பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் வெடிபொருள்கள்.
தொண்டி அருகே புதுக்குடி கடற்கரை கிராமத்தில் வெடிவைத்து மீன்பிடிக்க முயன்ாக பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் வெடிபொருள்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் கடலில் வெடி வைத்து மீன் பிடிக்க முயன்ாக 2 படகுகளையும், வெடி பொருள்களையும் கடலோரக் காவல்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தொண்டி அருகே புதுக்குடி கிராமத்தில் கடற்கரை பகுதியில் கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பதாக கடலோர காவல் படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 படகுகளைச் சோதனையிட்டனா். அப்போது அதில் 10 ஜெலட்டின் குச்சிகள், 5 டெட்டனேட்டா்கள் மற்றும் மின் வயா்களை பறிமுதல் செய்தனா். இதனையடுத்து 2 படகுகளையும் பறிமுதல் செய்து, தொண்டி அருகே புதுக்குடி பகுதியைச் சோ்ந்த கண்ணன் (29), ராமச்சந்திரன்( 50) ராம்குமாா் (30) அப்பாஸ் (38 )ஆகிய 4 போ் மீதும் கடலோர காவல்படை சாா்பு-ஆய்வாளா் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com