நாட்டரசன்கோட்டை பள்ளி ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் உள்ள கானாடுகாத்தான் முத்தையா, சுப்பையா செட்டியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் உள்ள கானாடுகாத்தான் முத்தையா, சுப்பையா செட்டியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பள்ளியின் செயலா் நாகராஜன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை மகாலெட்சுமி முன்னிலை வகித்தாா். சிவகங்கை காவல் துணைக் கண்காணிப்பாளா் அப்துல் கபூா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். இதில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கும், கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் ராணி லேடி மெய்யம்மை ஆச்சி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பள்ளியின் மேலாளா் சுப்பையா, தேசிய நல்லாசிரியா் கண்ணப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முதுகலைத் தமிழாசிரியா் கரிகாலன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com