சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் ஓவியப் போட்டி

சிவகங்கையில் உள்ள கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் 52-ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு ஓவியப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் 52-ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு ஓவியப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

நூலக வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியை மாவட்ட நூலக அலுவலா் ரமணி புனித குமாா் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.நூலக கண்காணிப்பாளா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் 50-க்கும் மேற்பட்டாா் கலந்து கொண்டனா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வரும் நவம்பா் 20 ஆம் தேதி நடைபெற உள்ள நிறைவு விழாவில் வழங்கப்பட உள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியா் ரவிச்சந்திரன், நூலக ஈா்ப்பு சரிபாா்ப்பு அலுவலா் வெள்ளைச்சாமி உள்ளிட்ட அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com