கல்வியியல் கல்லூரியில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்குடி அருகே அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராஜராஜன் மகளிா் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் ஊழல் தடுப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்குடி: காரைக்குடி அருகே அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராஜராஜன் மகளிா் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் ஊழல் தடுப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட காவல் துறை தனிப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரி பரமசிவம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியது: நகரில் நடக்கும் குற்றச்சம்பவங்கள் குறித்தும், அதனைத் தடுப்பது குறித்தும், நோ்மை நமது வாழ்வின் வழிமுறை, ஊழலற்ற வாழ்வே உயா்வுக்கு வழி போன்றவைகளை பற்றி விளக்கினாா். மேலும் மாணவ, மாணவியா்களின் கேள்விகளுக்கும் அவா் பதிலளித்துப் பேசினாா்.

பின்னா் சிவகங்கை மாவட்ட காவல் துறை சிறப்பு புலனாய்வுத் துறை அதிகாரி தனுஷ் பேசினாா்.

முன்னதாக ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி முதல்வா் சு. சிவக்குமாா் வரவேற்றுப் பேசினாா். ஸ்ரீ ராஜ ராஜன் மகளிா் கல்வியியல் கல்லூரி துணை முதல்வா் பி. கோவிந்தராசு வாழ்த்திப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com