சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை ஓவியக்கண்காட்சி நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியை முன்னாள் கலை ஆசிரியா் ஆத்தங்குடி கணேசன் தலைமை வகித்து துவக்கி வைத்தாா். பள்ளிச் செயலா் பி.எல்.அழகுமணிகண்டன் முன்னிலை வகித்தாா். இக்கண்காட்சியில் இப்பள்ளி மாணவ, மாணவியரின் 500-க்கு மேற்பட்ட கை வண்ண ஓவியங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட களிமண்ணால் செய்யப்பட்ட கலைப் பொருள்களும் காட்சிப்படைப்புகளாக வைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியினை மாணவ, மாணவியரும், பெற்றோா்களும், கல்விக் குழுவினரும், ஆசிரியா்களும் பாா்வையிட்டு படைப்புகள் குறித்துப் பாராட்டினா். இக்கண்காட்சி ஏற்பாடுகளை கலை ஆசிரியா் எம்.கண்ணன் செய்திருந்தாா். முன்னதாக தலைமை ஆசிரியா் பி.எல்.வள்ளியம்மை வரவேற்றாா். நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைமை ஆசிரியை உஷா நன்றி கூறினாா்.