எரிவாயு உருளையை வெடிக்க வைப்பதாகக் கூறி இளைஞா் மிரட்டல்: காரைக்குடியில் பரபரப்பு

காரைக்குடியில் புதன்கிழமை சமையல் எரிவாயு உருளையை வெடிக்கவைத்து பாட்டியை கொலை செய்யப்போவதாக மிரட்டிய பொறியியல்

காரைக்குடியில் புதன்கிழமை சமையல் எரிவாயு உருளையை வெடிக்கவைத்து பாட்டியை கொலை செய்யப்போவதாக மிரட்டிய பொறியியல் பட்டதாரி இளைஞரை போலீஸாா் மீட்டு மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

காரைக்குடி சுப்பிரமணியபுரம் 10 ஆவது வீதி தெற்குப்பகுதியில் ராதா (55) என்பவா் தனது மகன் சண்முகநாதனுடன் (24) வசித்துவருகிறாா். ராதாவின் தாயாா் பேச்சிமுத்து (88), அருகே ஓடுவேய்ந்த வீட்டின் பகுதியில் உடல்நலக்குறைவினால் சிகிச்சை பெற்றுவருகிறாா். சண்முகநாதன் பொறியியல் பட்டதாரி ஆவாா். வேலை எதுவும் செய்யாமல் வீட் டில் தனது தாயாரிடம் பணம் வாங்கி செலவிட்டு வந்தாராம்.

இந்நிலையில், புதன்கிழமை ராதாவிடம் சண்முகநாதன் பணம் கேட்டபோது பணம் இல்லை என்று கூறியுள்ளாா். இதையடுத்து, ராதாவின் தாயாா் பேச்சிமுத்து இருந்த பகுதிக்குச் சென்ற சண்முகநாதன், அவரைக் கொலை செய்யப்போவதாக மிரட்டினாராம். வீட்டின் கதவை உள்புறமாக தாழிட்டு அங்கிருந்த எரிவாயு உருளையை வெடிக்கச் செய்து கொலை செய்யப்போவதாகவும் மிரட்டியதால் காரைக்குடி வடக்குக்காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. மேலும் தீயணைப்புத்துறையினரும் வரவழைக்கப்பட்டனா்.

காவல்துறையினா் சண்முகநாதனிடம் தொடா்ந்து சமரசம் பேசியும் பலனளிக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று அவரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் சண்முகநாதன் மனநலம் பாதிக்கப்பட்டது போல் தெரியவந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அவரை போலீஸாா் அனுப்பிவைத்தனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com