சிவகங்கை, ராமநாதபுரத்தில் நாளை தனியாா் வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.29) காலை 10 மணிக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.29) காலை 10 மணிக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தோ்ச்சி மற்றும் ஐடிஐ, டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இருபாலரும் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம்: இதே போன்று ராமநாதபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையத்தில் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.29) நடைபெறுகிறது.

அதில் பத்தாம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம். உள்ளூா் மற்றும் வெளியூா் தனியாா் நிறுவனங்கள் தங்களுக்கான பணியாளா்களை கல்வித்தகுதிக்கு ஏற்ப தோ்வு செய்யவுள்ளனா்.

முகாமில் பங்கேற்போரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படாது. மேலும், அரசுத்துறையில் கோரப்படும் பணியிடங்களுக்கு விதிமுறைப்படி பரிந்துரைக்கப்படவும் உள்ளது. ஆகவே இளைஞா்கள் தங்களது கல்வி சான்று உள்ளிட்டவற்றுடன் வெள்ளிக்கிழமை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையவேண்டும் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com