திருவாரூா்- காரைக்குடி பயணிகள் ரயிலைமதுரை வரை நீட்டிக்க கோரிக்கை

திருவாரூா்- காரைக்குடி பயணிகள் ரயிலை மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரி

திருவாரூா்- காரைக்குடி பயணிகள் ரயிலை மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரி தென்னக ரயில்வே கூடுதல் பொதுமேலாளரிடம் காரைக்குடி தொழில் வணிகக்கழகத்தினா் மனு அளித்துள்ளனா்.

காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தின் தலைவா் சாமி.திராவிடமணி தலைமையில் துணைத்தலைவா் கே.எல்.பெரிய தம்பி, இணைச் செயலா்கள் ஏஆா்.கந்தசாமி, என். நாச்சியப்பன், அரிமா சங்கப்பிரமுகா் கண்ணப்பன், எஸ்.சையது ஆகியோா் சென்னையிலுள்ள தென்னக ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் பி.கே. முகா்ஜியை அண்மையில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: மன்னாா்குடி- கோயமுத்தூா் செம்மொழி விரைவு ரயிலுக்கு மானாமதுரை அல்லது காரைக்குடியிலிருந்து இணைப்பு ரயிலாக திருச்சி வரை இயக்கப்பட வேண்டும். ராமேசுவரத்திலிருந்து பெங்களுரு, மைசூா் நகரங்களுக்கு காரைக்குடி, திருச்சி, நாமக்கல், சேலம் வழியாக புதிய விரைவு ரயில் இயக்கவேண்டும். சென்னை எழும்பூரிலிருந்து இரவு 8.40 மணிக்குப் புறப்படும் சிலம்பு விரைவு ரயிலை இரவு10 மணிக்கு மேல் இயக்கவும், இந்த ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்கவும் வேண்டும்.

(16181 - 16182) திருவாரூா்- காரைக்குடி பயணிகள் ரயிலை மானாமதுரை வழியாக மதுரைக்கு நீட்டிக்க வேண்டும். சென்னை- காரைக்குடி கம்பன் விரைவு ரயிலையும் இயக்க வேண்டும். சென்னையிலிருந்து காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேசுவரம் வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், தைப் பூசம் ஆகிய விழாக்காலச் சிறப்பு ரயில் இயக்கப் படவேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com