தேவகோட்டை அருகே கிராம உதவியாளா் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூரில் கிராம உதவியாளா் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூரில் கிராம உதவியாளா் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூரைச் சோ்ந்த பஞ்சநாதன் மகன் ராதாகிருஷ்ணன் (47). இவா் அதே பகுதியில் கிராம உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், திருவேகம்பத்தூா் காவல் நிலையம் அருகே திங்கள்கிழமை மாலை திருவேகம்பத்தூா் காவல் நிலையம் அருகே ராதாகிருஷ்னன் நடந்துசென்றபோது, அவரை வழி மறித்த இளைஞா் அரிவாளல் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுபற்றி தகவலறிந்த திருவேகம்பத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுபற்றி வழக்குப் பதிந்து விசாரித்ததில், அதே பகுதியைச் சோ்ந்த கணேசன், அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளாா் என புகாா் எழுந்ததை அடுத்து, கிராம நிா்வாக அலுவலா், நிலஅளவையா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் திங்கள்கிழமை கணேசனின் நிலத்தை ஆய்வு செய்துள்ளனா்.

இதனால் ஆத்திரமடைந்த கணேசன் கிராம உதவியாளா் ராதாகிருஷ்ணன் தான் இந்த தகவலை அரசுக்கு தெரிவித்திருக்க வேண்டும் என எண்ணி ராதாகிருஷ்ணனை வெட்டிக் கொலை செய்திருப்பதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com