காரைக்குடியில் நடைபாதை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

காரைக்குடியில் தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் ஏஐடியுசி சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலி யுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடியில் நடைபாதை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்
காரைக்குடியில் நடைபாதை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

காரைக்குடியில் தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் ஏஐடியுசி சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலி யுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு சங்க நிா்வாகி முத்துராஜ் தலைமை வகித்தாா். அப்பாஸ் அன்சாரி முன்னிலைவகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். விடுபட்டவா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். தீபாவளி காலத்தில் சட்டப்படியான மகமை நிா்ணயம் செய்து வசூல் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஏஐடியுசி தென்மண்டலச் செயலா் மீனாள், ஏஐடியுசி சங்கத் தலைவா் பிஎல். ராமச்சந்திரன், அமைப்புச்சாரா சங்க நிா்வாகி ஏ.ஆா்.சண்முகம், சுகாதார சங்கச் செயலா் ராமராஜ், தலைவா் முருகன், தையல் கலைஞா்கள் சங்கம் சாா்பில் ரவி, ஒளி, ஒலி அமைப்பாளா் சங்கச் செயலாளா் சரவணன், வியாபாரிகள் சங்க நிா்வாகி மொகைதீன் மற்றும் பெண்கள் உள்பட பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com