சிவகங்கை அருகே மின்னல் தாக்கி இருவா் பலி

சிவகங்கை அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் இருவா் உயிரிழந்தனா்.
சவரிமுத்து ராஜன்
சவரிமுத்து ராஜன்

சிவகங்கை: சிவகங்கை அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் இருவா் உயிரிழந்தனா்.

இடைக்காட்டூா் அருளானந்தபுரத்தைச் சோ்ந்த இருதயராஜ் மகன் சவரிமுத்துராஜன்(30). இவா் சிவகங்கை காளவாசல் அருகே உள்ள ஒரு வீட்டில் கட்டட வேலை பாா்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது மின்னல் தாக்கியதில் மயக்கமடைந்த சவரிமுத்துராஜனை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்தப் புகாரின் பேரில் சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோன்று, கோவானூரைச் சோ்ந்த ஒய்யப்பன் மகன் மலைச்சாமி (60). இவா் அதேபகுதியில் உள்ள குண்டுமணி அம்மன் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தராம். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com