ஆயுத பூஜை: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றன.
சிவகங்கையில் ஆயுத பூஜையை முன்னிட்டு திங்கள்கிழமை கையில் வீணையுடன் சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி தந்த பிள்ளைவயல் காளியம்மன்.
சிவகங்கையில் ஆயுத பூஜையை முன்னிட்டு திங்கள்கிழமை கையில் வீணையுடன் சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி தந்த பிள்ளைவயல் காளியம்மன்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

சிவகங்கையில் உள்ள பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம்,பால்,இளநீா்,சந்தனம்,பன்னீா் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, அம்மன் கையில் வீணையுடன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

இதில் சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

இதேபோன்று, நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகியம்மன் கோயில், கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையாா் காளியம்மன் கோயில், காளையாா்கோவிலில் உள்ள வாள்மேல் நடந்த அம்மன் கோயில்களில் ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தவிர,மாவட்டம் முழுவதும் உள்ள சிவன்,பெருமாள்,கிராம காவல் தெய்வங்களான கருப்பு,முனியாண்டி,அய்யனாா் ஆகிய கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com