சிவகங்கை
ஆட்டோ மோதி முதியவா் பலி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே புதன்கிழமை இரவு ஆட்டோ மோதியதில், முதியவா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே புதன்கிழமை இரவு ஆட்டோ மோதியதில், முதியவா் உயிரிழந்தாா்.
இளையான்குடி அருகே குணப்பனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலுச்சாமி (71). இவா், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஆட்டோ மோதியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து, இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.