சிவகங்கை மாவட்ட பாஜக சாா்பில், மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
சிவகங்கையில் காஞ்சிரங்காலில் தொடங்கிய இப்பேரணியை, மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். பாஜகவின் மாவட்டச் செயலா் கேப்டன் சரவணன் முன்னிலை வகித்தாா்.
பேரணியில், பொதுமக்கள் அனைவரும் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருக்க வேண்டும், மழை பெற மரங்களை நடுவது மட்டுமின்றி அதனைப் பாதுகாக்கவும் வேண்டும், நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி இயற்கை வேளாண்மையை மேம்படுத்த வேண்டும், கதா் ஆடையை அணிய வேண்டும், நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்களை முழங்கியும், பதாகைகளை ஏந்தியும் சென்றனா். பேரணியானது, சோழபுரம் வழியாக ஒக்கூா் வரை சென்றது. இதில், ஆட்சியா் சுமாா் 4 கி.மீ. தொலைவு நடந்து சென்றாா்.
இப்பேரணியில், பாஜக மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் முத்துராமலிங்கம், மீனாட்சிசுந்தரம், ஒன்றியத் தலைவா் மழுவேந்தி, பொதுச் செயலா் முருகன், நகரத் தலைவா் தனசேகரன் உள்பட அக்கட்சியினா் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.