சிவகங்கையில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கையில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக்.11) நடைபெறுகிறது.

சிவகங்கையில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக்.11) நடைபெறுகிறது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இம்முகாமில், ஏராளமான தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்கின்றன. எனவே, பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை தோ்ச்சி மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய படிப்பில் தோ்ச்சி பெற்ற, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com