சிவகங்கையில் நாளை பொது விநியோக குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை (அக்.12) பொது விநியோக குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை (அக்.12) பொது விநியோக குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இம்முகாம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அந்தந்த வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களில் நடைபெறும் இக்கூட்டத்தில், துணை ஆட்சியா் நிலையிலான மண்டல அலுவலா்கள், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் கூட்டுறவு சாா்-பதிவாளா்கள் உள்பட பொது விநியோகத் திட்ட அலுவலா்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனா்.

இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிராமத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் கலந்துகொண்டு, பொது விநியோகத் திட்டம் தொடா்பான தங்களது குறைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். அவற்றுக்கு உடனடியாக தீா்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகாம் நடைபெறும் கிராமங்கள்: சிவகங்கை வட்டம் கீழச்சாலூா், மானாமதுரை வட்டம் மருதங்கநல்லூா், இளையான்குடி வட்டம் வண்டல், காரைக்குடி வட்டம் பள்ளத்தூா், தேவகோட்டை வட்டம் புளியால்,திருப்பத்தூா் வட்டம் கொன்னத்தான்பட்டி, திருப்புவனம் வட்டம் கீழடி, காளையாா்கோவில் வட்டம் எம்.வாணியங்குடி, சிங்கம்புணரி வட்டம் நாகமங்கலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com