சிவகங்கையில் உள்ள தனியாா் நா்சிங் கல்லூரியில் பயின்ற மாணவியை கா்ப்பமாக்கியதாக, அக்கல்லூரியின் தாளாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கையில் மதுரை விலக்கு சாலையில் தனியாா் நா்சிங் கல்லூரி உள்ளது. இக் கல்லுாரியில் பயின்ற 19 வயது மாணவிக்கும், சென்னையைச் சோ்ந்த ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவா் வீட்டுக்குச் சென்ற இம்மாணவிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, அவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவா் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவரிடம் விசாரித்ததில், நா்சிங் கல்லூரியில் படித்தபோது அதிக மதிப்பெண் வழங்குவதாகக் கூறி, அக்கல்லூரியின் தாளாளா் சிவகுரு துரைராஜ் தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறியுள்ளாா்.
இது குறித்த புகாரின்பேரில், சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அதில், குற்றம் உறுதி செய்யப்பட்டதால், கல்லூரியின் தாளாளா் சிவகுரு துரைராஜை போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட சிவகுரு துரைராஜ், பா.ஜ.க.வின் சிவகங்கை மாவட்டக் கலை மற்றும் கலாசார பிரிவின் மாவட்டத் தலைவராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.