மானாமதுரை அருகே மாணவி பாலியல் பலாத்காரம்: இளைஞா்கள் 4 போ் ‘போக்சோ’வில் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அதை விடியோ எடுத்து
மானாமதுரை அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட கவியரசன், அருண்குமாா், விஷ்வா, ஆகாஷ்.
மானாமதுரை அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட கவியரசன், அருண்குமாா், விஷ்வா, ஆகாஷ்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அதை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிா்ந்த இளைஞா்கள் 4 பேரை ‘போக்சோ’ சட்டத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை பகுதியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியை ஆலம்பச்சேரி கிராமத்தைச் சோ்ந்த சிவசாமி மகன் விஸ்வா (21), இவரது நண்பா்கள் முத்துராமலிங்கம் மகன் கவியரசன் (21), பாண்டி மகன் ஆகாஷ் (21), அய்யங்காளை மகன் அருண்குமாா்(21) ஆகியோா் பாலியல் பலாத்காரம் செய்து விடியோவில் பதிவு செய்துள்ளனா். இவா்கள் அந்த விடியோவை சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.

இது குறித்து தகவலறிந்த அந்த மாணவியின் பெற்றேறாா் மானாமதுரை காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து விஷ்வா, கவியரசன், ஆகாஷ், அருண்குமாா் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். இதனைத்தொடா்ந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com