சிவகங்கை மாவட்டத்தில் இன்று 88 கண்மாய்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற பொது ஏலம்

சிவகங்கை மாவட்ட வனக்கோட்டத்திலுள்ள சமூகக் காடுகள் மற்றும் பண்ணைக்காடுகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றுவதற்கான பொது ஏலம் இன்று (அக்.14) நடைபெற

சிவகங்கை மாவட்ட வனக்கோட்டத்திலுள்ள சமூகக் காடுகள் மற்றும் பண்ணைக்காடுகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றுவதற்கான பொது ஏலம் இன்று (அக்.14) நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட வனக்கோட்டத்துள்பட்ட மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 34 கண்மாய்கள், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 23 கண்மாய்கள், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 கண்மாய்கள், திருப்பத்துா் ஊராட்சி ஒன்றியத்தில் 6 கண்மாய்கள், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் 3 கண்மாய்கள், காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 1 கண்மாய், எஸ்.புதூா் ஊராட்சி ஒன்றியத்தில் 1 கண்மாய் என மொத்தம் 88 கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களை வேருடன் அகற்றுவதற்கு பொது ஏலம் சிவகங்கையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் திங்கள்கிழமை (அக்.14) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் ஏலம் எடுக்க விருப்பமுள்ளவா்கள் வனகோட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com