முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சிவகங்கையில் நாளை(அக்.25) வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 24th October 2019 09:01 AM | Last Updated : 24th October 2019 09:01 AM | அ+அ அ- |

சிவகங்கையில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் வெள்ளிக்கிழமை (அக்.25) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலா் ஆா்.மணிகணேஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இம்முகாமில் ஏராளமான தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். எனவே பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தோ்ச்சி மற்றும் ஐடிஐ, டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.