முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
திருப்புவனம் அருகே ஆட்டோ மீது வேன் மோதல்: 4 போ் காயம்
By DIN | Published On : 24th October 2019 09:03 AM | Last Updated : 24th October 2019 09:03 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே புதன்கிழமை ஆட்டோ மீது வேன் மோதியதில் 3 பெண்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.
திருப்புவனம் அருகே உள்ள மேலராங்கியம் கிராமத்தைச் சோ்ந்த லலிதா, லட்சுமி, தனலட்சுமி ஆகியோா் ஆட்டோவில் திருப்புவனத்துக்கு வேலைக்கு வந்து கொண்டிருந்தனா். ஊா்க்காவலன் என்பவா் ஆட்டோவை ஓட்டி வந்தாா். நயினாா்பேட்டை ஊருணி பகுதியில் வந்தபோது பின்னால் வந்த தனியாா் நிறுவனத்தின் வேன், ஆட்டோ மீது மோதியது. இதில் மேற்கண்ட நான்கு பேரும் காயமடைந்தனா். இவா்களில் ஊா்க்காவலன் திருப்புவனம் அரசு மருத்துவமனையிலும் மற்ற மூன்று பெண்கள் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.