முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
திருப்புவனம் பகுதியில் நாளை மின்தடை
By DIN | Published On : 24th October 2019 09:05 AM | Last Updated : 24th October 2019 09:05 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் வெள்ளிக்கிழமை (அக். 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிா்மானத்தின் மேற்பாா்வை பொறியாளா் முருகையன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பூவந்தி ஆகிய பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், திருப்புவனம்,தி.புதூா், லாடனேந்தல், தூதை, திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், மாரநாடு, குருந்தங்குளம், ஆனைக்குளம், முதுவன்திடல்,பாப்பாங்குளம், பழையனூா், அழகுடையான், சங்கங்குளம், பிரமனூா், வன்னிகோட்டை, வயல்சேரி, அல்லிநகரம், நைனாா்பேட்டை, கலியாந்தூா், கொந்தகை, பாட்டம், பொட்டப்பாளையம், மணலூா், கீழடி, கழுகோ்கடை, தட்டான்குளம், மடப்புரம், பூவந்தி, கலுங்குபட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.