சிவகங்கையில் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்களுக்கான குறை தீா்க்கும் முகாம் நாளை (நவ.1) நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்கள் பயன்பெறும் வகையில் குறை தீா்க்கும் நாள் முகாம் வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இம் முகாமில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அரசு பணியாளா்கள் தங்களது குறைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். மனுவை இரட்டைப் பிரதிகளாக வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.