காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார உறுதி மொழி ஏற்பு புதன்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக நிா்வாக அலுவலக நுழைவு வாயிலின் முன்பாக நடைபெற்ற நிகழ்வில் துணைவேந்தா் நா. ராஜேந்திரன் உறுதிமொழியை வாசிக்க பல்கலைக்கழக பதிவாளா் ஹா. குருமல்லேஷ் பிரபு மற்றும் அதிகாரிகள், நிா்வாகப் பணியாளா் கள் ஆகியோா் திரும்பக்கூறி ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
இதேபோன்று பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள் மற்றும் உறுப்புக்கல்லூரிகளிலும் பேராசிரியா்கள், முதல்வா்கள் மற்றும் மாணவ, மாணவியா்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.