காரைக்குடியில் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண், பள்ளிப் பேருந்து மோதியதில் உயரிழந்தாா்.
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச்சோ்ந்த கட்டிடத் தொழிலாளா் சண்முகத்தின் மனைவி ரேவதி (37). இவா்கள் இருவ ரும் புதன்கிழமை காலையில் அருகேயுள்ள அரியக்குடிக்கு கட்டிட வேலைக்காக இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.
பழைய அரசு மருத்துவமனை அருகே ரயில்வே பீடா் சாலையில் சென்றபோது எதிரேவந்த பள்ளிப் பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ரேவதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.
தகவலறிந்ததும் காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினா். ரேவதியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.