சிவகங்கை மாவட்டம் அரசனூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.13) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூவந்தி மின் பகிர்மானத்தின் உதவி மின் பொறியாளர் கு.செந்தில்குமார் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :
அரசனூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், அரசனூர், இலுப்பகுடி, பெத்தானேந்தல், திருமாஞ்சோலை, பில்லூர், படமாத்தூர்,சித்தலூர், கண்ணாரிருப்பு, கானூர், பச்சேரி, மைக்கேல்பட்டினம், களத்தூர், ஏனாதி, கல்லூரணி, கோவானூர் ஆகிய பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.