சிவகங்கை மாவட்டத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற இம்முகாமுக்கு திமுகவின் சிவகங்கை நகரச் செயலர் சி.எம்.துரைஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  செந்தில் முன்னிலை வகித்தார். இதில், திமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலரும், திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தார்.
இம்முகாமில் தெற்கு ஒன்றியச் செயலர் ஜெயராமன், வடக்கு ஒன்றியச் செயலர் முத்துராமலிங்கம், நகர இளைஞரணி அமைப்பாளர் அயூப்கான், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.ஹரிஹரன்,திமுகவின் மாவட்ட  மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன், மாவட்டத் துணைச் செயலர் மணிமுத்து, இலக்கிய அணி அமைப்பாளர் ரமேஷ்  உள்ளிட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com