மானாமதுரை பகுதியில் சனிக்கிழமை பலத்த சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. மானாமதுரை பகுதியில் காற்றடிக்கும் காலம் தொடங்கியும் காற்று வீசாமல் கோடைகாலம் போல வெயில் கொளுத்தி வந்தது. இதனால் மக்கள் இரவு நேரங்களில் புழுக்கம் தாங்க முடியாமல் தூக்கமின்றி தவித்தனர். அவ்வப்போது மழை மேகங்கள் திரண்டாலும் மழை பெய்யவில்லை.
இந் நிலையில் சனிக்கிழமை இரவு பலத்த சூறைக்காற்று வீசியது. பின்னர் தூறலாகத் தொடங்கிய மழை, அதன்பின் பரவலாக சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது. மழை காரணமாக அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது.