ராஜகாளியம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை விளக்குப் பூஜை நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை விளக்குப் பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில் உலக நன்மை வேண்டியும் பெண்கள் மாங்கல்ய பலன் வேண்டியும் இந்த திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி மாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமாக பால், தயிர், மஞ்சள், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு வெள்ளி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து அர்ச்சனைகளும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் 6 மணியளவில் 200 -க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கு கொண்ட திருவிளக்குப் பூஜை தொடங்கியது. இதில் பிள்ளையார்பட்டி சிவநெறிக் கழக சிவாச்சாரியர்கள் திருவிளக்குப் பூஜைக்கான 108 வேதமந்திரங்களை முழங்க பெண்கள் குத்துவிளக்கிற்கு புஷ்பம் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர்.  இதில் அனைவருக்கும் மஞ்சள், தாலிக்கயிறு, மங்கலத்தட்டு, உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செட்டியதெரு விழாக் குழுவினர் செய்திருந்தனர்.                                                                            
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com