சிவகங்கை
தேவகோட்டையில் இளைஞர் வெட்டிக் கொலை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வியாழக்கிழமை இரவு இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வியாழக்கிழமை இரவு இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தேவகோட்டையைச் சேர்ந்த அழகப்பன் மகன் ஐயப்பன்(28). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார்(28) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்கெனவே தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில், தேவகோட்டை- திருப்பத்தூர் சாலையில் உள்ள திரையரங்கம் அருகே ஐயப்பனுக்கும், வினோத்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வினோத்குமார் அரிவாளால் ஐயப்பனை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி தேவகாட்டை போலீஸார் வழக்குப் பதிந்து வினோத்குமாரை தேடி வருகின்றனர்.