சிவகங்கையில் அரசின் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக 24 பேர் மீது சிவகங்கை நகர் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கையில் மருதுபாண்டியர்களின் முழு உருவச் சிலையை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாமன்னர் மருதுபாண்டியர்கள் சமூக நல அறக்கட்டளை மற்றும் காளையார்கோவில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் அறக்கட்டளை சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் ஈடுபட்டனர். இதையடுத்து,அரசின் முன் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக மாமன்னர் மருதுபாண்டியர்கள் சமூக நல அறக்கட்டளை தலைவர் வசந்தக்குமார் உள்பட 24 பேர் மீது சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.