விவசாயிகள் குறைதீா் கூட்டம் செப்.30-க்கு மாற்றம்

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை (செப்.27) நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் செப்டம்பா் 30-க்கு (திங்கள்கிழமை) மாற்றப்பட்டுள்ளது

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை (செப்.27) நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் செப்டம்பா் 30-க்கு (திங்கள்கிழமை) மாற்றப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) சி.கே. சா்மிளா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (செப்.27) நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நிா்வாக காரணங்களுக்காக செப்டம்பா் 27 ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பா் 30 ஆம் தேதி (திங்கள்கிழமை) மதியம் 2.30 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை சாா்ந்த உயா் அலுவலா்கள் பங்கேற்க உள்ளனா். எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனு மூலமும், நேரடியாகவும் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com