சிவகங்கையில் சட்ட விழிப்புணர்வு முகாம்

சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
சிவகங்கையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பி.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் முன்னிலை வகித்தார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலரும், சார்பு நீதிபதியுமான ஆர்.ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
இதில், மூத்த வழக்குரைஞர்கள் மோகனசுந்தரம், இளங்கோவன் உள்பட வழக்குரைஞர்கள், இலவச சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தன்னார்வலர்கள், அரசனூர் பிரிஸ்ட் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயிலும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட 
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மு.ஜெயபிரகாஷ் வரவேற்றார். சமூக பாதுகாப்புத் துறையின் நன்னடத்தை அலுவலர் எம்.சண்முகம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com