காரைக்குடி அருகே குளத்தில் மூழ்கி ஜோதிடர் பலி

காரைக்குடி அருகே கோட்டையூரில் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.

காரைக்குடி அருகே கோட்டையூரில் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.
கோட்டையூரைச் சேர்ந்தவர் கணேசன் (50). ஜோதிடரான இவர், சனிக்கிழமை காலை 10 மணியளவில் குளிப்பதற்காக அருகிலுள்ள குளத்துக்குச் சென்றுள்ளார். சமீபத்தில் பெய்த மழையால் குளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்ததால், ஆழமான பகுதிக்குச் சென்ற ஜோதிடர் தண்ணீரில் மூழ்கினார். 
இதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அதையடுத்து, காரைக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர், குளத்தில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக தேடி கணேசனின் சடலத்தை சனிக்கிழமை மாலையில் மீட்டனர். 
இது குறித்து பள்ளத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com