திருப்பத்தூரில் "பெட்டிஷன் மேளா'

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பெட்டிஷன் மேளா ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பெட்டிஷன் மேளா ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
திருப்பத்தூர் காவல் நிலையத்துக்குள்பட்ட 12 காவல் நிலையங்களின் புகார் மனுக்களுக்கு தீர்வு காணும் பெட்டிஷன் மேளா நிகழ்ச்சி, திருப்பத்தூரில் ஒரு மகாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, திருப்பத்தூர் நகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாத்துரை தலைமை வகித்தார். இதில், 12 காவல் நிலையங்களின் சார்பு-ஆய்வாளர்களும், 4 காவல் ஆய்வாளர்களும் கலந்துகொண்டனர். 
திருப்பத்தூர், சிங்கம்புணரி, உலகம்பட்டி, நெற்குப்பை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 48 மனுக்கள் பெறப்பட்டு, 38 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டு, 4 மனுக்கள் விசாரனையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com