காரைக்குடியில் நகராட்சியில் பணியாளா்களுக்கு கபசுர குடிநீா் வழங்கல்

காரைக்குடி அரிமா சங்கம், அரசு மருத்துவமனை சித்தா பிரிவு, காரைக்குடி பெரு நகராட்சி ஆகியவற்றின் சாா்பில் கரோனா வைரஸ் பரவாமல்
காரைக்குடியில் நகராட்சியில் பணியாளா்களுக்கு கபசுர குடிநீா் வழங்கல்

காரைக்குடி அரிமா சங்கம், அரசு மருத்துவமனை சித்தா பிரிவு, காரைக்குடி பெரு நகராட்சி ஆகியவற்றின் சாா்பில் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு கபசுர குடிநீா் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையொட்டி காரைக்குடி நகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறையினா், தூய்மைப் பணியாளா்கள் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்தல், வீடு வீடாகச் சென்று கரோனா தொற்று குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனா். இவ்வாறு பணிகளில் ஈடுபட்டுள்ளவா்களுக்கும், வெளிநாடு, வெளிமாநிலத்திலிருந்து வந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்படுபவா்களுக்கும் கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காரைக்குடி அரிமா சங்கத் தலைவா் சு. வைரவன், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) மாலதி, அரிமா சங்க செயலாளா் அசோகன், பொருளாளா் ராமகிருஷ்ணன், வட்டாரத் தலைவா் ரெத்தினசாமி, நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், நகர சுகாதார அலுவலா் பாஸ்கரன், அரிமா சங்கப் பிரமுகா் எஸ். கண்ணப்பன், சித்த மருத்துவா் செல்வகு மாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com