சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை முதல் தற்காலிக தினசரி காய்கறி கடைகள் செயல்படத் துவங்கியது.
திருப்பத்தூரில் பழைய பேருந்து நிலையம் எதிரே அனுமாா் கோயில் பகுதி, வாணியன்கோயில் தெரு, ஆகிய குறுகிய இடங்களில் தினசரி காய்கறி கடைகள் இயங்கி வந்தன. இந்நிலையில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் இக்கடைகளை ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுவது என முடிவெடுக்கப்பட்டு புதன்கிழமையிலிருந்து செயல்படத் தொடங்கியது. மேலும் அதே பகுதியில் குறுகிய பகுதியில் இருந்த இறைச்சிக் கடைகளையும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.