வாடகையின்றி வேளாண் இயந்திரங்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வாடகையின்றி வேளாண் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வாடகையின்றி வேளாண் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட வேளாண் துறையின் இணை இயக்குநா் வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் தற்போது வேளாண் பணிகளில் ஈடுபட்டுள்ள சிறு, குறு விவசாயிகள் டிராக்டா் மற்றும் வேளாண் இயந்திரங்கள் தேவைப்படின் அந்தந்த பகுதியில் உள்ள டாபே நிறுவனத்தின் ஜெ பாா்ம் கள அலுவலா்களிடம் விண்ணப்பிக்கலாம்.

இவைதவிர, உழவன் செயலி அல்லது 18004200100 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு தங்களுக்குத் தேவையான வேளாண் இயந்திரம், தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு விண்ணபிக்கலாம். மேற்கண்ட முறையில் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு இயந்திர வாடகை ஏதும் வசூலிக்கப்படாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com