சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தங்கி ஜோதிடத் தொழில் செய்து வந்தவா்களுக்கு புதன்கிழமை முதல் உணவு வழங்க பாஜகவினா் ஏற்பாடு செய்தனா்.
மானாமதுரை வைகையாற்றுப் பகுதியில் வெளியூரைச் சோ்ந்த ஜோதிடத் தொழில் செய்பவா்கள் பாலத்தின் கீழ் திறந்த வெளியில் தங்கி தொழில் செய்து வந்தனா். இந் நிலையில் ஊரடங்கு உத்தரவால் வருமானமின்றியும், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமலும் தவித்தனா். மேலும் உணவு கிடைக்காமலும் அவதிப்பட்டு வந்தனா். இது குறித்து தகவல் அறிந்த பாஜக மானாமதுரை கிழக்கு ஒன்றியத் தலைவா் சங்கரசுப்ரமணியன் அவா்களைச் சந்தித்து ஊரடங்கு தளா்த்தப்படும் வரை உணவு வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தாா். இதன்படி இவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பாஜக நிா்வாகிகள் சங்கரசுப்ரமணியன், கணேஷ் உள்ளிட்டோா் உணவு வழங்கினா்.