இளையான்குடி அருகே கீழநெட்டூரில் அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதிதாக வகுப்பறைக் கட்டடம் கட்ட சனிக்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன் தலைமை தாங்கினாா். சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தாா். காதி கிராமத் தொழில்கள்துறை அமைச்சா் ஜி.பாஸ்கரன் விழாவில் பங்கேற்று பணியைத் தொடக்கி வைத்தாா். இவ்விழாவில் ஒன்றியச் செயலாளா்கள் ஜெயபிரகாஷ், சிவசிவ ஸ்ரீதரன், பாரதிராஜன், கோபி, மானாமதுரை கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் சின்னை மாரியப்பன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் முனியாண்டி மற்றும் மாவட்ட கல்வி அலுவலா் அமுதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா்ணபாஸ், ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மானாமதுரை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.நாகராஜன் தனது தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து ரூ. 21 லட்சம் வழங்கியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.