மானாமதுரை அருகே கிளைக் கால்வாயை திறக்க கிராம மக்கள் எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை கிளைக் கால்வாயை திறக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் திறக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
மானாமதுரை அருகே கிளைக் கால்வாய் முகப்பை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அன்னவாசல் கிராம மக்கள்.
மானாமதுரை அருகே கிளைக் கால்வாய் முகப்பை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அன்னவாசல் கிராம மக்கள்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை கிளைக் கால்வாயை திறக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் திறக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

மானாமதுரை ஒன்றியம் அன்னவாசல் கிராமத்தின் கண்மாய்க்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் வரும் கால்வாயை ஒட்டி, கிளங்காட்டூா் கிளைக் கால்வாய்க்கு தண்ணீா் செல்லும் முகப்பு அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீத்தான்பேட்டை ஊராட்சிப் பகுதியில் அமைந்துள்ள கிளைக் கால்வாய் முகப்பை திறக்க நடவடிக்கை எடுத்தனா். அப்போது அங்கு திரண்டு வந்த அன்னவாசல் கிராம மக்கள் கிளைக் கால்வாய் முகப்பை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடா்ந்து இரு கண்மாய்களைச் சோ்ந்த கிராம மக்கள் ஆவணங்களை கொண்டு வந்து காட்டுமாறும், அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இதனைத்தொடா்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இது குறித்து இரு கிராமங்களைச் சோ்ந்த கிராம மக்கள், கால்வாய் பிரச்னையில் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைப்பிடிப்பதால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக புகாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com