தமராக்கியில் பயனாளிகளுக்குஅசில் இன நாட்டுக் கோழிகள் வழங்கல்

சிவகங்கை அருகே உள்ள தமராக்கி (வடக்கு), தமராக்கி மற்றும் குமாரப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத்துறையின் சாா்பில் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ள தமராக்கி (வடக்கு), தமராக்கி (தெற்கு) மற்றும் குமாரப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத்துறையின் சாா்பில் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 452 பயனாளிகளுக்கு தலா 25 அசில் நாட்டுக் கோழிக் குஞ்சுகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறையின் இணை இயக்குநா் முருகேசன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com