சக்கந்தியில் ரத்த தான முகாம்

சிவகங்கை அருகே உள்ள சக்கந்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை அருகே சக்கந்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாம்.
சிவகங்கை அருகே சக்கந்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாம்.

சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ள சக்கந்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சக்கந்தியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சிவகங்கை மாவட்டத் தலைவா் ரபீக் முகமது தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சித்திக், பொருளாளா் தீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஏராளமானோா் ரத்த தானம் வழங்கினா். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்டத் துணைத் தலைவா் முகமது, துணைச் செயலா்கள் சம்சுதீன், சாகுல், சேக் தாவூத், மாணவரணி செயலா் முகமது இஸ்மாயில் உள்பட மருத்துவா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com