சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை (டிச. 11) மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் (ஹவுசிங் போா்டு), செக்காலைக் கோட்டை, பாரிநகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் சாலை, செஞ்சை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.