சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,659 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், புதன்கிழமை மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,661 ஆக அதிகரித்துள்ளது.
இவா்களில் பெரும்பாலானோா் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 11 போ் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனா். அவா்களில் 3 போ் பூரண குணமடைந்ததை அடுத்து, புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 8 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ராமநாதபுரம் மவட்டத்தில் யாருக்கும் கரோனா பாதிப்பில்லை: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை நிலவரப்படி யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.