சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வியாழக்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்புவனம் அருகே மேலச்சொரிக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கச்சம்மாள். இவா் வியாழக்கிழமை வயலுக்குச் சென்று வேலை பாா்த்துவிட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். வழியில் முனியான்டி கோயில் பாலம் என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 போ் கச்சம்மாள் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து பழையனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.