சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தமறாக்கி, வி.மலம்பட்டி, இடையமேலூா், கீழப்பூங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில் தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
விழாவில் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ராஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் முனியாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.